சுயாதீன குழுக்கள் தலைமையில் இடைக்கால அரசு! – வீரவன்ஸ தெரிவிப்பு

Weerasumana Weerasinghe

இடைக்கால அரசு தொடர்பில் எதிர்க்கட்சிகள், சாதகமான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் முன்னெடுக்காவிடின் சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசைஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இடைக்கால அரசுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவுடனான இரண்டாம் கட்ட பேச்சு எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

ஒன்றினைத்து இடைக்கால அரசை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இடைக்கால அரசு தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பிரதான எதிர்க்கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சு இடம்பெறவுள்ளது. சாதகமான பதில் கிடைக்காவிடின் அரசில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேரையும் ஒன்றினைத்து இடைக்கால அரசை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்படும்.

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவாக பொதுத்தேர்தலை நடத்துவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version