27 12
இலங்கைசெய்திகள்

ரணிலின் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு

Share

ரணிலின் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு

ஐந்து மில்லியன் இ-கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 N-வரிசை கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

எபிக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் அதன் நிறைவேற்றுத் தலைவரால் தாக்கல் செய்யப்பட்ட பேராணை மனுவை ஏற்றே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையை மீறிய ஊழல் பேரம் என்ற அடிப்படையில் இந்த திட்டத்துக்கு எதிராக மனுதாரரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவு ஒக்டோபர் 1ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

தேசிய கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறி, முறையான கொள்முதல் நடைமுறைக்கு புறம்பாக, Thales DIS Finland OY மற்றும் Just In Time Technologies (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து 750,000 எண்கள் இணையக் கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எபிக் லங்கா தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், கொள்முதலில் முறைகேடுகள் நடந்ததாக தேசிய கொள்முதல் ஆணையமும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செப்டெம்பர் 02, 2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த கொள்வனவுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர்கள், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், அமைச்சர்கள் அமைச்சரவை மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...