rtjy 287 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம்

Share

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்பு குறித்து அனுர விமர்சனம்

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் ரீலோட் போன்று பதவி நீடிப்பு செய்யப்படுகிறார் என்று மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக வினவபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சபாநாயகர், அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கவேண்டும்.

எனினும் கடந்த மாதங்களில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு பதிலாக, தற்போதைய அதிபரின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்படுகிறது.

யாரோ ஒருவர் தங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்வதைப் போன்றே. பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட கடைசி நீடிப்பு அக்டோபர் 9 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தநிலையில் அவருக்கு மூன்று வார கால பதவி நீடிப்பை வழங்குவதற்கான மற்றொரு பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றது.

இருப்பினும், அரசியலமைப்பு சபை, அந்த பரிந்துரையை அங்கீகரிக்கவில்லை. எனவே தற்போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர் யார் என்று அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

ரீலோட் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், புதிய பொலிஸ் மா அதிபர் யார்? என்று அவர் வினவினார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தன, பொலிஸ் மா அதிபர் தொடர்பாக, ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு இந்த மாத இறுதி வரை சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...