24 67009657c22f4
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Share

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் செல்லும், என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்புடைய அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் மேற்படி தாமதங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன்படி தேசிய தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் விசாரணையை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமில்லாத வாகனங்களை முறையான நடைமுறையின்றி பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்து தணிக்கை அதிகாரிகள் இருக்க வேண்டிய சில அரச நிறுவனங்களில் இரண்டு அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது..

Share
தொடர்புடையது
574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...

image b726ec86c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் – டிக்கோயாவில் அனைத்து கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை...

25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...