24 67009657c22f4
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Share

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் செல்லும், என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்புடைய அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் மேற்படி தாமதங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன்படி தேசிய தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் விசாரணையை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமில்லாத வாகனங்களை முறையான நடைமுறையின்றி பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்து தணிக்கை அதிகாரிகள் இருக்க வேண்டிய சில அரச நிறுவனங்களில் இரண்டு அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது..

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...