25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

Share

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (21) வட மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிரதமர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்.

2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, நாட்டின் கல்வி முறைமை பலப்படுத்தப்படும். 2026ஆம் ஆண்டில் நிலவும் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என அண்மைய மீளாய்வில் தெரியவந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் இதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் தற்போதைய பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய மாற்றங்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...