சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறாளாய் விநாயகர் ஆலயம் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. குறித்த ஆலய வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான அரச மரம் காணப்படுகின்றது.
இந்நிலையில் அண்மைக் காலமாக குறித்த அரச மரத்தடியில் வழிபாடு செய்வதற்கு என படையினரின் உதவியுடன் பௌத்த பிக்குகள் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நாளை வியாழக்கிழமை பௌர்ணமி தினத்தன்று அரச மரத்தடியில் படையினரின் உதவியுடன் பிக்குகள் தாம் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக அரசியல் வாதிகள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment