24 66611df4e3223
இலங்கைசெய்திகள்

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

Share

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் 75 வீதமானவர்கள் பெண்கள் ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணிகளில் பெண்கள் குறைவாகவே உள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன (Eran Wickremaratne) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூல விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் எழுபத்தைந்து வீதமான மாணவர்கள் பெண்கள் ஆனால் முழு நாட்டிலும் இரண்டு அல்லது மூன்று பெண் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மட்டுமே உள்ளனர் என்று எரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறெனில் அணுகுமுறையில் சிக்கல் இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது என்று விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் 1979இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

ஆனால் அது இலங்கையில் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்றும் எரான் விக்ரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...