24 66611df4e3223
இலங்கைசெய்திகள்

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

Share

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் 75 வீதமானவர்கள் பெண்கள் ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணிகளில் பெண்கள் குறைவாகவே உள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன (Eran Wickremaratne) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூல விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் எழுபத்தைந்து வீதமான மாணவர்கள் பெண்கள் ஆனால் முழு நாட்டிலும் இரண்டு அல்லது மூன்று பெண் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மட்டுமே உள்ளனர் என்று எரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறெனில் அணுகுமுறையில் சிக்கல் இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது என்று விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் 1979இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

ஆனால் அது இலங்கையில் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்றும் எரான் விக்ரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...