24 66611df4e3223
இலங்கைசெய்திகள்

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

Share

சட்ட பீடத்தின் பெண் மாணவர்கள் தொடர்பில் தகவல்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் 75 வீதமானவர்கள் பெண்கள் ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணிகளில் பெண்கள் குறைவாகவே உள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன (Eran Wickremaratne) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூல விவாதத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

சட்ட பீடத்தில் உள்ள மாணவர்களில் எழுபத்தைந்து வீதமான மாணவர்கள் பெண்கள் ஆனால் முழு நாட்டிலும் இரண்டு அல்லது மூன்று பெண் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மட்டுமே உள்ளனர் என்று எரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறெனில் அணுகுமுறையில் சிக்கல் இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது என்று விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் சபையால் 1979இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

ஆனால் அது இலங்கையில் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்றும் எரான் விக்ரமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...