12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

Share

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள் அறிவிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) வலியுறுத்தியுள்ளது.

அதிக விலைக்கு விற்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து, அதிகாரசபை 1977 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குறித்து அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெந்தலுவ – பறக்கடுவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த உணவக உரிமையாளர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு ரூபா 100,000 தண்டம் விதிக்கப்பட்டது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...