16 5
இலங்கைசெய்திகள்

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை

Share

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலையன்ஸ் ஏர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு காலை வேளையில் விமான சேவையை தொடங்கியது.

இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.

வாரத்தில் 4 நாட்கள் அதுவும் ஒரு முறை மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
21 14
உலகம்செய்திகள்

ஈரான் தாக்குதலால் ட்ரம்ப் அதிர்ச்சி: முன்கூட்டியே எச்சரித்த உளவுத்துறை – வளைகுடாவில் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் சரமாரி பதிலடித் தாக்குதல்கள் தமக்கு “ஆச்சரியம்” அளிப்பதாக...

20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள...

19 14
செய்திகள்உலகம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல்...

18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...