24 663146bc45da6
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

Share

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த முருகன் என்ற கடற்றொழிலாளர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த வோக்கி டோக்கி மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக தமிழக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான ஆறாவது சம்பவம் இதுவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் குறித்து இலங்கையின் கடற்படை இன்னும் பதில் எதனையும் வழங்கவில்லை.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...