24 663146bc45da6
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

Share

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த முருகன் என்ற கடற்றொழிலாளர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த வோக்கி டோக்கி மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக தமிழக கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான ஆறாவது சம்பவம் இதுவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் குறித்து இலங்கையின் கடற்படை இன்னும் பதில் எதனையும் வழங்கவில்லை.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...