8 1
இலங்கைசெய்திகள்

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி

Share

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகுடன் மோதியபோது கவிழ்ந்த படகில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அவர்களின் நலம் குறித்து விசாரித்த, இந்திய தூதரக அதிகாரி சாய் முரளி அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு தொலைபேசி அழைப்புகளையும் தூதரக அதிகாரிகள் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

முன்னதாக, கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் நேற்று வியாழக்கிழமை மோதி விபத்துக்குள்ளாகின.

இதன்போது கப்பலில் இருந்த நான்கு இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதுடன், இரண்டு பேர் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...