15 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

Share

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

இந்தியாவில் (India) 1990ஆம் ஆண்டு முதல் வசிப்பதாகக் கூறப்படும் இலங்கை அகதி ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து, அவரது மனுவை ஏற்று அல்லது நிராகரித்து உத்தரவை நிறைவேற்றுமாறு இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜேந்திரன் (Gajendiran) என்ற இந்த இலங்கை அகதி தாக்கல் செய்த குடியுரிமை விண்ணப்பத்தின் மீது 12 வாரங்களுக்குள், விண்ணப்பதாரரிடமிருந்து தேவையான அனைத்து விளக்கங்களையும் பெற்று, பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி நியாயமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் (Anita Sumanth) உத்தரவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தனது குடியுரிமை விண்ணப்பத்தை விரைவுபடுத்துமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் வசிக்கும் மனுதாரர், விழுப்புரத்தில் உள்ள கீழ் புதுப்பேட்டை மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த காலத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியன்று ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார்,

இப்போது அவர் ஒன்பது வயது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்று மனுதாரரின் சட்டத்தரணி எல். ரோமியோ ராய் அல்ஃபிரட் மன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய அரசின் மூத்த சட்டத்தரணி ஜி.பாபு, மனுதாரரின் விண்ணப்பத்தில் உள்ள முரண்பாடுகளை எடுத்துரைத்தார்.

மனுதாரர் தன்னை கஜேந்திரன் என்று கூறும்போது, தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையால் வழங்கப்பட்ட அகதிச் சான்றிதழில் அவர் ஆர்.கஜேந்திரகுமார் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இரண்டு தரப்பினரிதும் சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதி குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது பெயரில் உள்ள முரண்பாடுகள் உட்பட அனைத்து விளக்கங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பெற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...