rtjy 48 scaled
இலங்கைசெய்திகள்

கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Share

கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 4 படகுகளுடன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்றுக் காலை புறப்பட்ட படகுகளே நேற்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புகளுக்குள் எல்லை தாண்டி உட்புகுந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் கைதான 14 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதில் புதுக்கோட்டையை சேர்ந்த 14 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை சிறபிடித்து செல்லும் சம்பவங்களும் படகுகளை பறிமுதல் செய்யும் சம்பங்களும் அடிக்கடி நடைபெற்று வருவதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மூன்று படகுடன் இன்று (06.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை மூன்று படகுகளில் புறப்பட்ட கடற்றொழிலாளர்களே இன்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைதான தமிழக கடற்றொழிலிலாளர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் கைதான தமிழக கடற்றொழிலிலாளர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...