rtjy 48 scaled
இலங்கைசெய்திகள்

கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Share

கைதான இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 4 படகுகளுடன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்றுக் காலை புறப்பட்ட படகுகளே நேற்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புகளுக்குள் எல்லை தாண்டி உட்புகுந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் கைதான 14 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதில் புதுக்கோட்டையை சேர்ந்த 14 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை சிறபிடித்து செல்லும் சம்பவங்களும் படகுகளை பறிமுதல் செய்யும் சம்பங்களும் அடிக்கடி நடைபெற்று வருவதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மூன்று படகுடன் இன்று (06.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை மூன்று படகுகளில் புறப்பட்ட கடற்றொழிலாளர்களே இன்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைதான தமிழக கடற்றொழிலிலாளர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் கைதான தமிழக கடற்றொழிலிலாளர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...