rtjy 13 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய நிதியமைச்சர்

Share

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய நிதியமைச்சர்

இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி இவர் இன்று (01.11.2023) இலங்கை வந்தடையவுள்ளார்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்ததன் 200வது ஆண்டு விழாவான “நாம் 200” நிகழ்ச்சியில் நிதியமைச்சர் முக்கிய உரையை ஆற்ற உள்ளதாகவும் கொழும்பில் நடைபெறும் இந்தியா-இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டின் போது அவர் உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் SBI வங்கி கிளைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஜயத்தின் போது லங்கா ஐஓசி எண்ணெய் தொட்டிகள், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ்.பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...