tamilni 324 scaled
இலங்கைசெய்திகள்

விபத்தில் பலியான இந்திய குடும்பம்

Share

விபத்தில் பலியான இந்திய குடும்பம்

இலங்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒமேஸ் சைகலின் மருமகள், பேரன் மற்றும் இருவர் இலங்கையில் உயிரிழந்த விவகாரத்தில் நுகர்வோர் குறைதீர் மன்றம், 50 லட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு இரண்டு சுற்றுலா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாட்டாளர்களான சைகலின் மகன் யோகேஸ் மற்றும் பேத்தி ஐஸ்வர்யா ஆகியோர், தங்களது ஐந்து பேர் கொண்ட குடும்பம், மூன்றாம் தரப்பு சேவை வழங்குனரை உள்ளடக்கிய சுற்றுலா முகவர் மூலம் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தாம் சுற்றுலாவில் இருந்தபோது தமது வாகனத்தின் சாரதியாக 67 வயதான ஒருவர் அமர்த்தப்பட்டதாக முறைப்பாட்டாளர் யோகேஸ் கூறியுள்ளார்.

இந்தநிலையில் 2019 டிசம்பர் 23,அன்று, குடும்பத்தை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு டிரக் வாகனம் மீது மோதியதில் அதில் இருந்த மூன்று பேர் மற்றும் ஓட்டுனர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

முறைப்பாட்டாளர்களான யோகேஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து கவனக்குறைவு மற்றும் சேவைகளில் குறைபாடு, நியாயமற்ற வர்த்தக நடைமுறை, தவறான விளம்பரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கான செலவாக ஒரு லட்சம் ரூபாயை அவர்கள், சுற்றுலா முகவர் நிறுவனத்திடம் கோரினார்கள் அத்துடன் நட்டஈடாக 8.99 கோடி ரூபாயை கோரினார்கள்.

இந்த மனுக்களை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம்,2023 ஆகஸ்ட் 16 திகதியிட்ட அதன் உத்தரவில், இரண்டு பயண நிறுவனங்களுக்கும் உத்தரவு கிடைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முறைப்பாட்டாளர்களுக்கு 50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தவறினால் இரு நிறுவனங்களும் மேலும் 10 லட்சம் ரூபாவை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...