24 6617a5dd309ec
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

Share

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இலங்கை உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய தேர்தல்களையும் அதனுடன் கூடிய பிரசாரத்தையும் பார்ப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உலகெங்கிலும் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகள் போன்ற பல்வேறு பிராந்தியங்களின் பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.

தகவல்களின்படி நேபாளம், பங்களாதேஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசியல் கட்சிகள் பாரதீய ஜனதாவிடம் இருந்து அழைப்புகளைப் பெற்றுள்ளன, தற்போதைய நிலவரப்படி, 15 நாடுகளின் பிரதிநிதிகளிடமிருந்து பங்கேற்றல் உறுதிப்படுத்தல்கள் பெறப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பானவரான. விஜய் சௌதைவாலே, இது தொடர்பான அழைப்புக்களை அனுப்பியுள்ளார்.

ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் உறுதிப்பாடுகள் இன்னும் வரவில்லை “உங்கள் பாரதீய ஜனதாவை அறிந்து கொள்ளுங்கள்” என்பதன் கீழ், டெல்லியை சேர்ந்த வெளிநாட்டு தூதர்களுக்கு பாரதீய ஜனதா இந்த அழைப்புக்களை அனுப்பியுள்ளது.

97 கோடி வாக்காளர்களுடன், இந்தியாவின் ஏழு கட்ட பொதுத்தேர்தல், ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....