24 6617a5dd309ec
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

Share

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இலங்கை உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய தேர்தல்களையும் அதனுடன் கூடிய பிரசாரத்தையும் பார்ப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உலகெங்கிலும் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகள் போன்ற பல்வேறு பிராந்தியங்களின் பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.

தகவல்களின்படி நேபாளம், பங்களாதேஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசியல் கட்சிகள் பாரதீய ஜனதாவிடம் இருந்து அழைப்புகளைப் பெற்றுள்ளன, தற்போதைய நிலவரப்படி, 15 நாடுகளின் பிரதிநிதிகளிடமிருந்து பங்கேற்றல் உறுதிப்படுத்தல்கள் பெறப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பானவரான. விஜய் சௌதைவாலே, இது தொடர்பான அழைப்புக்களை அனுப்பியுள்ளார்.

ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் உறுதிப்பாடுகள் இன்னும் வரவில்லை “உங்கள் பாரதீய ஜனதாவை அறிந்து கொள்ளுங்கள்” என்பதன் கீழ், டெல்லியை சேர்ந்த வெளிநாட்டு தூதர்களுக்கு பாரதீய ஜனதா இந்த அழைப்புக்களை அனுப்பியுள்ளது.

97 கோடி வாக்காளர்களுடன், இந்தியாவின் ஏழு கட்ட பொதுத்தேர்தல், ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...