24 6617a5dd309ec
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

Share

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இலங்கை உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய தேர்தல்களையும் அதனுடன் கூடிய பிரசாரத்தையும் பார்ப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உலகெங்கிலும் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகள் போன்ற பல்வேறு பிராந்தியங்களின் பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.

தகவல்களின்படி நேபாளம், பங்களாதேஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசியல் கட்சிகள் பாரதீய ஜனதாவிடம் இருந்து அழைப்புகளைப் பெற்றுள்ளன, தற்போதைய நிலவரப்படி, 15 நாடுகளின் பிரதிநிதிகளிடமிருந்து பங்கேற்றல் உறுதிப்படுத்தல்கள் பெறப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பானவரான. விஜய் சௌதைவாலே, இது தொடர்பான அழைப்புக்களை அனுப்பியுள்ளார்.

ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் உறுதிப்பாடுகள் இன்னும் வரவில்லை “உங்கள் பாரதீய ஜனதாவை அறிந்து கொள்ளுங்கள்” என்பதன் கீழ், டெல்லியை சேர்ந்த வெளிநாட்டு தூதர்களுக்கு பாரதீய ஜனதா இந்த அழைப்புக்களை அனுப்பியுள்ளது.

97 கோடி வாக்காளர்களுடன், இந்தியாவின் ஏழு கட்ட பொதுத்தேர்தல், ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...