12 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

Share

இலங்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கோட்டாபயவை வலியுறுத்திய இந்தியா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர், அந்த நேரத்தில் வற்புறுத்த முயன்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருந்தால், அதனை புதுடில்லியில் உள்ளவர்கள் வழங்கத் தயாராக இருப்பதாக கோட்டாபயவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும், வன்முறையின் மூலம் அவர் வெளியேற்றப்படுவது புதுடில்லிக்கு சிறந்த விடயமாக இருக்காது என்ற அடிப்படையில் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் முதலில் இந்தியாவுக்குச் சென்றார் என்பதும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோட்டாபய அதனை ஏற்காது நாட்டில் இருந்து வெளியேறினார்

பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றுள்ளமையை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...