5 37
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலத்திற்கு மல்வத்து பீடம் எதிர்ப்பு

Share

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலத்திற்கு மல்வத்து பீடம் எதிர்ப்பு

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தியாவிலிருந்து கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வடக்கிற்கு கொண்டு வரப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைத்தால் இவ்வாறான கடத்தல்கள் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த போது மல்வத்து பீடாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தினால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாது என உயர்ஸ்தானிகர் ஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாலத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்படும் எனவும் எனவும் வடக்கின் உட்கட்டுமான வசதிகள் மேம்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அனுசரணைகளில் விஹாரைகளில் சூரிய சக்தி கலங்களை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...