16 10
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்

Share

இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்

இந்தியாவில் நடைபெறும் “4வது தெற்காசிய கனிஸ்ட நிலை தடகள செம்பியன்சிப் போட்டிகள் 2024”இன் ஆரம்ப நாளான நேற்று இலங்கை தடகள வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதன்படி, ஆடவருக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கையின் மெரோன் விஜேசிங்க 10.41 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தையும், அதே போட்டியில் தினேத் வீரரத்ன 10.49 வினாடிகளில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் சன்சலா ஹிமாசினி வெண்கலப் பதக்கத்தையும், தருசி அபேசிகா தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கை வீராங்கனை சவிந்து அவிசிகா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் சினெல்லா ஆனி விஜேதுங்க 12.04 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஏ.டபிள்யூ. ஜெயவி ரன்ஹித 15.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

மூன்று நாள் தெற்காசிய ஜூனியர் தடகள செம்பியன்சிப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது

இந்த விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணியில் 53 கனிஸ்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...