24 6692a5a7afa18
இலங்கைசெய்திகள்

இந்தியாவும் இலங்கையும் தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சி

Share

இந்தியாவும் இலங்கையும் தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சி

இந்தியாவும் இலங்கையும் தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய முயற்சித்து வருவதாக, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் நிதி இணைப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இது ஒரு வளர்ச்சியாகும் என்று அவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

இதன்படி, பொருட்களுக்கு உள்ளூர் நாணயத்தில் பணம் செலுத்தப்படவுள்ளது.

எனவே இது மிகவும் அர்த்தமுள்ள நல்ல திட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய சுற்றுலாப் பயணிகள் வருவதும் மிகவும் எளிதாக இருக்கும், அவர்கள் இலங்கைக்கு வந்து இந்திய ரூபாயில் பணம் செலுத்துவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு உச்சத்தில் உள்ளது எனவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலையில் இன்னும் இலங்கை நெருக்கடியை விட்டு வெளியேறவில்லை என்பதுடன் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு இருதரப்புப் பணிகளை முடித்துவிட்டதோடு, பத்திரப்பதிவுதாரர்களுடனும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், புதிய வருவாய் வழிகளை உருவாக்குவதற்கான புதிய வழிகளையும், அதில் இந்தியாவின் பங்கையும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியாவுடனான தொடர்பை பெரிய அளவில் பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...