11 20
இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி

Share

பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி

இலங்கையில் பெருந்தோட்டப் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான மானிய உதவியை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜெயசுந்தர ஆகியோர் இது தொடர்பான இராஜதந்திர கடிதங்களில் அண்மையில் கொழும்பில் வைத்து  கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்படி, பெருந்தோட்டப் பிரதேசங்களில் 9 பாடசாலைகள் இந்திய அரசாங்கத்தின் மானிய ஆதரவை பெறவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் நிதியுடன், திட்டத்திற்கான மொத்த அர்ப்பணிப்பு இப்போது 600 மில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த திட்டத்தின் ஊடாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பாடசாலையும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....