2 13 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் அண்டை நாடு

Share

இலங்கையில் நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் அண்டை நாடு

இலங்கையில், தனது நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமான வழிகளை இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை பணியாளர் வி.சிறினிவாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் தலைமையில், குழு ஒன்று 2024 ஜூலை 7-9 வரை மூன்று நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்தது.

இலங்கை சிவில் சேவை அதிகாரிகளின் திறனைக் கட்டியெழுப்புவதற்கான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான செயற்பாட்டு கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் நல்லாட்சி நடைமுறைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த சாத்தியங்கள் குறித்து இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.

இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோரை சந்தித்த தூதுக்குழு, ஜனாதிபதியின் செயலாளர் எஸ் பி ஏகநாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்ததமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...