2 13 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் அண்டை நாடு

Share

இலங்கையில் நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் அண்டை நாடு

இலங்கையில், தனது நல்லாட்சி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமான வழிகளை இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை பணியாளர் வி.சிறினிவாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் தலைமையில், குழு ஒன்று 2024 ஜூலை 7-9 வரை மூன்று நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்தது.

இலங்கை சிவில் சேவை அதிகாரிகளின் திறனைக் கட்டியெழுப்புவதற்கான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான செயற்பாட்டு கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் நல்லாட்சி நடைமுறைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த சாத்தியங்கள் குறித்து இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.

இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோரை சந்தித்த தூதுக்குழு, ஜனாதிபதியின் செயலாளர் எஸ் பி ஏகநாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்ததமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...