இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

5
Share

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளின் போது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புத்தரின் போதனைகள் மற்றும் பாலியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரித்ததை நினைவுகூரும் வகையில், புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச அபிதம்ம திவாஸ் விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புத்தபெருமான் தனது சொற்பொழிவுகளை பாலி மொழியிலேயே ஆற்றியுள்ளார். இந்தநிலையில், இந்திய அரசு, பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை இந்த மாதத்தில் வழங்கியுள்ளதால், இந்த ஆண்டு அபிதம்மா திவாஸ் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாலி மொழிக்கு செம்மொழியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை, புத்தபெருமானின் மகத்தான பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதை என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் புத்தபெருமானின் போதனைகள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, புத்தபெருமானின் கொள்கையின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுநோய் போன்ற உலகளாவிய அவசர நிலைகளின் போது இந்தியாவின் விரைவான நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...