4 8
இந்தியாஇலங்கைசெய்திகள்

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

Share

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

கடந்த வாரம் ஏர் இந்தியா பெங்களூர்(Bengaluru) – சான் பிரான்சிஸ்கோ(San Francisco) விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு(blead) ஒன்று காணப்பட்டுள்ளது, அதற்காக ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த சம்பவம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி சென்ற விமானத்தில் குறித்த பயணி பயணித்துள்ளார்.

பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழங்கப்பட்ட உணவில் உலோகத் தகடு ஒன்று இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்,

“உணவில் உலோகத் தகடு இருப்பதை பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதுடன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...