tamilni 425 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் வெள்ளை ஈயின் தாக்கம் : கட்டுப்படுத்த நடவடிக்கை

Share

அதிகரிக்கும் வெள்ளை ஈயின் தாக்கம் : கட்டுப்படுத்த நடவடிக்கை

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னை பயிரில் காணப்படும் ஓலைகளில் வெள்ளை ஈயின் தாக்கம் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய், சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு மருந்து விசிறும் 20 லீட்டர் கொள்கலனின் கலந்து விசிறுவதன் மூலம் ஈயின் தாகத்தை கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை ஈயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய திணைக்களத்தினை தொடர்பு கொண்டு மருந்து விசிறுவதன் ஊடாக நோயினை கட்டுப்படுத்த முடியும்” எனவும் தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதல்கள்: அரசாங்கத்தின் நடுநிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் கேள்வி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும்...

21 5
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு மோதல்: அமைதிக்கான அவசர அழைப்பு விடுத்த ஐக்கிய நாடுகள் சபை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலைக் கட்டுப்படுத்தி, அமைதிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்குமாறு ஐக்கிய...

13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...