24 6641466f608ce
இலங்கைசெய்திகள்

நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள்

Share

நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள்

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்த நிலையில் நீதிமன்றின் செயல்பாடுகளுக்கு அது பாரிய இடையூறாக மாறியுள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு இடங்களும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஐந்து இடங்களும் வெற்றிடங்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதியரசர்கள் ஓய்வு பெற்றதை அடுத்தே இந்த இடங்கள் வெற்றிடங்களாகியுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீதியரசர் கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

இதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்களின் வெற்றிடங்கள் காரணமாக நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் செயல்படாததால், வழக்குகள் தேங்கி கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் ஆகியோரே உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு நியமிக்கத் தகுதி பெற்றவர்களாவர்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஓய்வுபெறவுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு வெற்றிடம் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...