அதிகரிக்கும் மின்கட்டணங்கள் – உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!!

202104110956313706 Introduction of Electronic Connection Name Change System SECVPF

நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கண்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரச் செலவு அதிகரித்துள்ளதாலும், மின்சார சபை நீண்டகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தற்போது அமுலில் இல்லாவிட்டாலும் இயன்றளவு மின்சாதனப் பாவனையைக் குறைத்து மின்வெட்டைத் தவிர்ப்பதற்கு உதவுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், இக் கோரிக்கைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

#SrilankaNews

Exit mobile version