24 661d40b63ef14
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

Share

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அண்மையில் இனந்தெரியாத நபரொருவால் ஊடுருவப்பட்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குறித்த இணையத்தளம் மீளமைக்கப்பட்டுள்ளதாக நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் இவ்வாறாக இனந்தெரியாத தரப்பினரால் ஊடுருவப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த மக்கள் அறிந்திருக்க வெண்டுமென்பதோடு அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...