அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்!

covid 19

அங்கொட தொற்று நோய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் 19 நோயாளர்களுக்கு மேலதிகமாக 30 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 50ற்கும் குறைவான கொவிட் 19 நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், வைத்தியசாலையே அனைத்தையும் நிர்வகித்து வருவதாகவும் அத்தநாயக்க தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொவிட் 19 வேகமாகப் பரவி வருவதால், எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

ஒட்சிஜன் தேவைப்படும் பல நோயாளிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version