download 9 1 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிகரித்துள்ள கறவை மாடுகள் திருட்டு!

Share

கம்பஹா மாவட்டத்தில் தினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மாடுகள் திருடப்படுவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாடுகள் நாளொன்றுக்கு 15-30 லீற்றர் வரை பால் கொடுக்கும் பசுக்கள் எனவும், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 35-40 பசுக்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான விவசாய அதிகாரிகளுடனான கலந்துரையாடலில், மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள மாடு திருட்டு தொடர்பான விபரங்களை மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில், சொகுசு வான்களில் வருபவர்கள், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துள்ள பால்மாக்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அத்துடன் தீவின் மற்ற பகுதிகளில் மாடு திருட்டு அதிகரித்து வருவதாக அனைத்து விவசாய அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இரவு ரோந்து, வாகன சோதனை அதிகரிப்பு மற்றும் பசு திருடர்களுக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தற்போது வழங்கப்படும் தண்டனை அதிகரிப்பு தொடர்பில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் அனுப்புமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...