24 66120837d81e0
இலங்கைசெய்திகள்

சுகாதாரத் துறையினருக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

சுகாதாரத் துறையினருக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கையின் சுகாதாரத் துறையின் தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உத்தியோகபூர்வ ஆடைக் கொடுப்பனவான 15,000 ரூபா 10,000 ரூபா அதிகரிக்கப்பட்டு 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை மே மாதத்திலும் அடுத்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை அதே வருடம் மார்ச் மாதத்திலும் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேரியா கட்டுப்பாட்டு உதவியாளர், பொது சுகாதார கள அலுவலர், பூச்சியியல் உதவியாளர், பற் சிகிச்சையாளர் பணியிடங்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 10,300 ரூபா முதல் 17,000 ரூபா வரை 6,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 14,000 ரூபா உதவித்தொகை 9,000 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 23,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தடுப்பூசி போடுபவர்கள் மற்றும் இளநிலை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 9,300 ரூபா உதவித்தொகை 5,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Schools
செய்திகள்இலங்கைபிராந்தியம்

10 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர் இல்லை: மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அவலநிலை அம்பலம்!

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த பத்து வருடங்களாக வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் எவரும்...

1770006808 dalai 6
செய்திகள்உலகம்

90 வயதில் கிராமி விருது வென்று தலாய் லாமா சாதனை: The Reflections ஆல்பத்திற்கு உயரிய அங்கீகாரம்!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக ‘கிராமி’ (Grammy) விருதை...

cb028b50 ff55 11f0 9972 d3f265c101c6
உலகம்செய்திகள்

மெலனியா ட்ரம்ப் ஆவணப்பட இயக்குநர் பிரட் ரட்னர்: எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்களால் சர்ச்சை!

மெலனியா ட்ரம்ப் குறித்த புதிய ஆவணப்படமான ‘Melania: 20 Days to History’ வெளியாகி வரும்...

1675419473 gavel 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு மோசடி விவகாரம்!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...