இலங்கைசெய்திகள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Share
26 2
Share

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாத இறுதியில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நிய கையிருப்பு , இந்த ஆண்டின் (2024) முதல் ஏழு மாதங்களில் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

இதில் சீனாவின் மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணியும் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களின் மொத்த வெளிநாட்டு கையிருப்பின் மூலம் ஈடுசெய்யக்கூடிய இறக்குமதியின் அளவு சுமார் 3.8 மாத இறக்குமதியாகும்.

கடந்த ஜூலை மாதம் உள்ளூர் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர அந்நிய செலாவணியாக கொள்வனவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...