சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை
இலங்கைசெய்திகள்

சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை

Share

சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை

நாட்டில் இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை 2400 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மக்கள் நாள்தோறும் உணவில் இஞ்சியை பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். தற்போது இஞ்சியை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த ஆண்டு இஞ்சியின் விளைச்சல் பாரிய அளவில் குறைந்துள்ளமை காரணமாகவே இஞ்சியின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மரக்கறி மற்றும் பழங்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

அந்தவகையில், கொழும்புவில் உள்ள மக்கள் நெருக்கடியான சந்தையில் அதிக அளவிலான கடை உரிமையாளர்கள் காய்கறிகள், பழங்கள் என விற்பனை செய்கின்றனர்.

அதன் விலைவாசிகள் அதிகரித்துள்ளமை குறித்து பல கடை உரிமையாளர்கள் வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர்.

மேலும் விலையைக் குறைக்கவும், குறைந்த அளவில் காய்கறி வாங்குவதைக் தவிர்க்கவும் நிறைய பேரம் பேசுவதாகக் கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...