tamilni 78 scaled
இலங்கைசெய்திகள்

உணவுப்பொதி விலை அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது

Share

உணவுப்பொதி விலை அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது

தேங்காய் விலை திடீரென அதிகரித்துள்ளமை உணவுப்பொதியின் விலை அதிகரிப்பிற்கு ஒரு காரணம் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

60 முதல் 80 ரூபாவாக இருந்த சாதாரண தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 முதல் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கறி தயாரிப்பில் தேங்காய் பாலை பயன்படுத்துவது அத்தியாவசியமானது எனவும், தேங்காயின் விலை உயர்வால் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு கடினமான சூழல் என்பதுடன், எதிர்வரும் பண்டிகை காலங்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...