24 6618dc3945576
இலங்கைசெய்திகள்

புத்தாண்டு காலத்தில் குறைவடைந்த கேக்கிற்கான தேவை

Share

புத்தாண்டு காலத்தில் குறைவடைந்த கேக்கிற்கான தேவை

நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கேக் துண்டு ஒன்றின் விலையும் 40 முதல் 60 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆனால், பல்பொருள் அங்காடிகளில் இந்த இனிப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இனிப்பு வகைகளின் விலை உயர்வு காரணமாக இனிப்புகளுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கேக் விலை உயர்வால் கேக்கிற்கான தேவையும் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ பட்டர் கேக் 1500 முதல் 1800 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மாஜரீன் போன்றவற்றின் விலை உயர்வால் கேக் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...