82ZigS0BPiSE4ayfkwdm
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மின்சார பாவனையை நிறுத்திக் கொள்வோர் அதிகரிப்பு!

Share

இலங்கையில், நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் மின்பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மொத்தமாக சுமார் 60 இலட்சம் குடும்பங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பு இவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

அதன் காரணமாக, கடந்த பெப்ரவரி தொடக்கம் இதுவரை சுமார் நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் குறைந்த பட்சம் ஒரு அலகு கூட பயன்படுத்தாமல் மின்சார பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலங்களில் 90 அலகுகள் வரையான மின்சாரப் பாவனை கொண்டிருந்தோர்.

தற்போது 60 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அநீதியான முறையில் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#srilanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...