மின் கட்டணம் அதிகரிப்பு!

ceb 1

ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை, 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மின் கட்டணத்தை 229 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை அனுமதி கோரி இருந்தாலும், 75 வீத அதிகரிப்புக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version