இலங்கைசெய்திகள்

இலங்கையில் டெங்கு தாண்டவம்! – 3 மாதங்களில் 7,947 பேர் பாதிப்பு!

Share
Dengue
Share

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 397 பேராகப் பதிவாகியுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் 1,826 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 725 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் குருநாகலில் 761 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 538 நோயாளர்களும், களுத்துறையில் 499 நோயாளர்களும் மற்றும் காலி மாவட்டத்தில் 456 பேர் டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்றும் தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...