tamilni 379 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள படுகொலைகள்

Share

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள படுகொலைகள்

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன.

கடந்த 15ஆம் திகதி கொழும்பு ரண்தெனிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கடந்த 20ஆம் திகதி தெலிஜ்ஜவில பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஜீப்பில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...