rtjy 214 scaled
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்!

Share

மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள மின் கட்டணம்!

மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”சட்டமூலங்களுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும். மின் உற்பத்திக்கான செலவீனங்கள் குறைந்திருக்கின்றது.

ஒரு வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுப்பதானது சட்டவிரோத செயல்.

இந்த நடைமுறைக்கு அப்பால் மின் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது சட்டவிரோதமானது.

மின் கட்டண அதிகரிப்பிற்கான காரணங்களாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது என்றும் மின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கின்றது என்றும் மின்சார சபை கூறுகின்றது.

மின்சார கேள்வி அதிகரிப்பு தொடர்பான அறிக்கைகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியிருந்தது. தற்போது வரையில் அது கிடைக்கப்பெறவில்லை.

எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வளம் இருக்கின்றது.

அதே நேரம் அணல் மின் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளும் உலக சந்தையில் குறைவடைந்துள்ளன.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...