tamilnib 8 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கை

Share

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து, உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக அண்மையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச நிறுவனங்கள் ஊடாக ஒரு முட்டை 43 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த முட்டைகளின் உற்பத்தி திகதி உள்ளிட்ட விபரங்கள் முத்திரையிடப்பட்டுள்ளன.

இந்த முத்திரையை அழித்து விட்டு உள்நாட்டு சந்தையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முத்திரைகள் விசேட உபகரணமொன்றின் மூலம் அழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

சதொச நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை கொள்வனவு செய்து அவற்றில் காணப்படும் முத்திரைகளை அழித்து விட்டு ஒரு முட்டை 50 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...