இலங்கைசெய்திகள்

ஏமாற்றமடையாதீர்!! – மத்திய வங்கி அறிவிப்பு!

download 5 1 2
Share

இலங்கைப் பொருளாதாரமானது வரலாற்றில் எதிர்கொண்டிருந்த மிகவும் மோசமான நெருக்கடியிலிருந்து பொருளாதார மீட்சியடைகின்ற இம்முக்கியமான தருணத்தில், வேண்டுமென்றோ அல்லது வேறுவிதமாகவோ வெளியிடப்படும் தவறான  அறிக்கைகளினால் பொதுமக்கள் ஏமாற்றமடைய வேண்டாமென இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை தெளிவுபடுத்த விரும்புவதாக தெரிவித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (06) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார்’ எனக் குறிப்பிட்டிருந்தன.

எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது.

2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமானதும் வேதனையளிக்கின்றதுமான கொள்கைசார் வழிமுறைகள் பொருளாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்குத் துணைபுரிந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இச்சீர்திருத்தங்கள் அண்மித்த காலத்தில் மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்துகின்ற சீராக்கச் செலவுகளைத் தோற்றுவித்துள்ள போதிலும், உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்கு அவை அவசியமாயிருந்ததுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

இருப்பினும், வளர்ச்சியை மேம்படுத்துகின்ற சீர்திருத்தங்களை உள்ளடக்கிய எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதாரச் சீராக்கச் செயற்றிட்டத்திலிருந்து ஏதேனும் தாமதம் அல்லது விலகல் ஏற்படும் பட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார மீட்சிக்குக் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தும் வேளையில் பொருளாதார தோற்றப்பாட்டினை மெதுவடையச்செய்யக்கூடும் என்ற கருத்தினையே ஆளுநர் மீள் வலியுறுத்தினார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...