வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!

Share

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!

அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், மருந்துகளின் தரம் மற்றும் தன்மை குறித்து நோயாளிகளுக்கு உறுதியளித்துள்ளதாகவும், வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் சுகாதார அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும், தாதியர்கள், வைத்திய ஊழியர்கள் நோயாளிகளின் உயிரை ஒருபோதும் ஆபத்தில் ஆழ்த்தவில்லை என்றும், அண்மைய நாட்களில் ஊடகங்கள் தெரிவித்தது போல் எந்தவொரு நோயாளியின் உயிருக்கும் வேண்டுமென்றே ஆபத்தினை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சின் தலைமையிலான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ஒவ்வொரு நோயாளியின் உயிரையும் காக்க எப்போதும் உழைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவசர நிலை ஏற்பட்டால், நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...