வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!

Share

வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அச்சப்பட வேண்டாம்!

அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், மருந்துகளின் தரம் மற்றும் தன்மை குறித்து நோயாளிகளுக்கு உறுதியளித்துள்ளதாகவும், வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் சுகாதார அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும், தாதியர்கள், வைத்திய ஊழியர்கள் நோயாளிகளின் உயிரை ஒருபோதும் ஆபத்தில் ஆழ்த்தவில்லை என்றும், அண்மைய நாட்களில் ஊடகங்கள் தெரிவித்தது போல் எந்தவொரு நோயாளியின் உயிருக்கும் வேண்டுமென்றே ஆபத்தினை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சின் தலைமையிலான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ஒவ்வொரு நோயாளியின் உயிரையும் காக்க எப்போதும் உழைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவசர நிலை ஏற்பட்டால், நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...