24 660624edce6b9
இலங்கைசெய்திகள்

பண்டிகை காலத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

பண்டிகை காலத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சோதனையிட தொடங்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடைகளை பரிசோதிப்பதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது தயாரிக்கப்பட்ட பல உணவு மாதிரிகள் சுவை பரிசோதகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகை காலத்தில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ சான்றுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பண்டிகைக் காலத்திற்காக உற்பத்தி செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருட்களை பரிசோதகர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,பொது மக்கள் உணவுப்பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...