tamilni 293 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்!

Share

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்!

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்களினூடாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் அல்லது வண்ண பென்சில் குச்சிகளில் பூசப்பட்ட மை தரமற்றதாக காணப்படுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

ஈயம் போன்ற கன உலோகங்கள் வாய்வழி உட்கொள்ளல் மூலம் உடலுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தின்படி, குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 19 கனரக உலோகங்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் EN71-3 என சான்றிதழ் பெற்றுள்ளன.

இதற்கிடையில், குழந்தைகள் உணவின் மூலம் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவு பெட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் இருந்து கொள்வனவு செய்யும் போது உபகரணங்களில் அடிப்பகுதியில் BPA யில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்த ஏற்றவை என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...