tamilni 293 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்!

Share

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்!

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்களினூடாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் அல்லது வண்ண பென்சில் குச்சிகளில் பூசப்பட்ட மை தரமற்றதாக காணப்படுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

ஈயம் போன்ற கன உலோகங்கள் வாய்வழி உட்கொள்ளல் மூலம் உடலுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தின்படி, குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 19 கனரக உலோகங்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் EN71-3 என சான்றிதழ் பெற்றுள்ளன.

இதற்கிடையில், குழந்தைகள் உணவின் மூலம் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவு பெட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் இருந்து கொள்வனவு செய்யும் போது உபகரணங்களில் அடிப்பகுதியில் BPA யில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்த ஏற்றவை என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...